Tamil Poem தமிழ் கவிதை | வருகிறதே வருகிறதே வசந்த காலம் ( varukirathey varukirathey vasantha kaalam)

வன மங்கை ஆடுகிறாள்
மன முவந்து பாடுகிறாள்
குயில் வந்து கூவுதம்மா
குக்கூ குக்கூ குக்கூ . . .         (வன மங்கை)

மலர் கொடிதன் மடியினிலே
மணம் தன்னில் தவழ்ந்து விட்டு
திசை திசையாய் சென்றதம்மா
தென்றல் காற்று ....
தென்றல் காற்று .. .
தென்றல் காற்று ....          (வன மங்கை)

இயற்கை அன்னை திரும்பி விட்டாள்
இளமையிலே குதித்து விட்டாள்
மலர் மாலை அணிந்து கொண்டாள்
மங்கை அங்கே . . . .      
மங்கை அங்கே . . . . 
மங்கை அங்கே . . . .           (வன மங்கை)

வனமெல்லாம் கொண்டாட்டமே
மனமெல்லாம் உற்சாகமே
வருகிறதே வருகிறதே
வசந்த காலம் . . . .
வசந்த காலம் . . . .
வசந்த காலம் . . . .        (வன மங்கை)


என்றும் அன்புடன் . . . . . சங்கீதா
with love .... sangeetha

Comments

  1. அழகான கவிதை... பாடகூடிய விதமும் அருமை!

    வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. It could be composed with a good music, lovely poem Sangeetha, I just finished a painting to go with this poem as a coincidence :-)

    ReplyDelete
  3. Very nice article... thank for share.. i love it.

    ReplyDelete

Post a Comment