Posts

Showing posts with the label Tamil Poem தமிழ் கவிதை

Tamil Poem தமிழ் கவிதை | வந்தே மாதரம் ஜய வந்தே மாதரம் - தேசபக்திப் பாடல் (Vandemataram Jaya Vandemataram - Patriotic Song)

Image
  வந்தே மாதரம் ஜய வந்தே மாதரம் / Vandemataram Jaya Vandemataram பாடல் / Lyrics:   மஹாகவி சுப்பிரமணிய பாரதி / Mahakavi Subramania Bharathi பாடியவர் / Singer:   ஹரிஷ்மா எஸ். ஆர். / Harishma S. R. இசையமைப்பு / Music: வி. முருகன் திருவட்டார் / V. Murugan Thiruvattar ஓவியம் / Drawing: ஆரபி எஸ். கிருஷ்ணா / Aarabhi S Krishna

Sangeetha's Poem on Corona Virus/COVID-19

Poem on Corona Virus/COVID-19 by M. Sangeetha in Tamil, Malayalam and Hindi language Tamil Poem (தமிழ் கவிதை) Version கொரோனா வைரஸ் சொல்லவா நான் ஒரு கதை மானிடா மனிதனில் மாண்புமிகு மற்றொன்றும் இல்லை என்றான் மண்ணில் ஆயதினால் தானோ மண்ணின் கர்ப்பத்திற்கே அவன் விலை பேசினான் எத்தனை நாட்கள் எத்தனை நாட்கள் பூமி உயிர் பிச்சைக் கேட்டது அவனிடம் விழவில்லையே அவன் செவிகளில் படவில்லையே அவன் கண்களில் மனிதனில் மாண்புமிகு ஒன்றுமில்லை என்பதினாலே உயிரை பாலாய் ஊற்றிய தாயை விட உயிர் பாதை காட்டிய தந்தையை விட மானுட நாணயம் மறந்த அவனுக்கு காகித நாணயம் மாண்பாய் பட்டதோ ஆணவம் அணைப்பொட்டி ஒழுகிய மனிதனை கண்டு நின்றதாம் ஒரு சிறு வைரஸ் பொட்டித்து எறிந்தது மனிதனின் சங்கிலியை ஜாதியின்றி மதமின்றி மொழியின்றி பணமின்றி பதவியின்றி உயிர் பிச்சைக் கேட்கிறான் மனிதன் ஒரு நுண் வைரஸின் முன்னில் வைரஸ் கூறிய அறிவுரையோ.... புரிந்து கொள் மானிடா மாபெரும் பிரபஞ்சத்தில் நீ அடிவைத்து நடக்கும் மழலை என்று தனிமனிதனால் நீ ஒரு பூழு என்று பதறாதே... பதறாதே... இனியும் நீ கோர்த்து கொள் பொட்டிய மனிதச் சங்கிலியை இன்னும் சற்று உறைப்பாகவே.... நல்லொரு ...

Tamil Poem தமிழ் கவிதை | கலாமிற்கு சலாம்

Image
Dr A.P.J. Abdul Kalam கலாம் எங்கள் அப்துல் கலாம் சலாம் எங்கள் சலாம் பாரத அன்னையை வானத்தில் உயர்த்தி பறக்க வைத்த கலாம் - எங்கள் கலாம் ஏவினார் விண்ணில் கலம் பூமியில் நின்றே கலாம் பாரத மண்ணின் புகழ் உலகிற்கே உணர்த்திய கலாம் - எங்கள் கலாம் முதல் குடிமகனாய் மானிட குருவாய் தீபத்தை ஏற்றிய கலாம் எழுபிறவியிலும் பாரதத் தாயின் மகனாய் பிறந்த கலாம் காலத்தை வென்ற கலாம் - எங்கள் சலாம்  அப்துல் கலாம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலுடன் - சங்கீதா Photo Courtesy: India Today

Poem | Independence Day

Vande Mataram ! Vande Mataram ! Happy Independence Day Our Mother India is celebrating her 66th Independence Day.  Let us wish our mother land to have more and more anniversaries like this.  For that let us work, think, act and so and so everything do together with out any diversity. In the eve of Independence day i would to like present the following poems written by Mrs. Sangeetha   मात्रु भूमि की जय मेरी आंखें  देखती हैं मेरे कान सुनते हैं मेरी जीभ बोलती है की मात्रु भूमि की जय     (मेरी) कोयल इसे गाती है मोर सुनकर नाचती है सब के मुख से निकल पडा की मात्रु भूमि की जय     (मेरी) कोई धर्म नहीं हैं कोई वर्ग नहीं हैं हम सब बोलें एक स्वर में मात्रु भूमि की जय      (मेरी) இந்திய மண் இந்திய நாட்டு மண் இது பெருமை பூண்ட மண் இது வீரர் குருதி சுமந்த நமது வீர மண் இது தியாக மண் இது - மானிடர் வீர மண் இது                       ...

Tamil Poem தமிழ் கவிதை | வருகிறதே வருகிறதே வசந்த காலம் ( varukirathey varukirathey vasantha kaalam)

வன மங்கை ஆடுகிறாள் மன முவந்து பாடுகிறாள் குயில் வந்து கூவுதம்மா குக்கூ குக்கூ குக்கூ . . .         (வன மங்கை) மலர் கொடிதன் மடியினிலே மணம் தன்னில் தவழ்ந்து விட்டு திசை திசையாய் சென்றதம்மா தென்றல் காற்று .... தென்றல் காற்று .. . தென்றல் காற்று ....          (வன மங்கை) இயற்கை அன்னை திரும்பி விட்டாள் இளமையிலே குதித்து விட்டாள் மலர் மாலை அணிந்து கொண்டாள் மங்கை அங்கே . . . .       மங்கை அங்கே . . . .  மங்கை அங்கே . . . .           (வன மங்கை) வனமெல்லாம் கொண்டாட்டமே மனமெல்லாம் உற்சாகமே வருகிறதே வருகிறதே வசந்த காலம் . . . . வசந்த காலம் . . . . வசந்த காலம் . . . .        (வன மங்கை) என்றும் அன்புடன் . . . . . சங்கீதா with love .... sangeetha

Tamil Poem தமிழ் கவிதை | வரதட்சணை (varathakshanai)

மலரை நாடும வண்டிடம் மலர் நாடவில்லை வரதட்சணை மலையில் ஓடும் நீரிடம் மலை ஓதவில்லை வரதட்சணை மழையை தேடும் பூமியிடம் மழை தேடவில்லை வரதட்சணை வனத்தை நாடும் விலங்கிடம் வனம் நாடவில்லை வரதட்சணை - பின் ஏன் மனதை பகரும் மனிதனுக்கிடையே மனத்தை பகைக்கும் வரதட்சணை? மாலை தென்றலை நுகரும் மனிதனிடம் தென்றல் நுகரவில்லை வரதட்சணை - பின் ஏன் மாலை போடும் மைந்தனுக்கு மங்கையின் மேலொரு வரதட்சணை . . . . என்றும் அன்புடன் . . . . . சங்கீதா with love .... sangeetha

Tamil Poem தமிழ் கவிதை | ஆகும் உன்னால் ஆகும் (aakum unnal aakum)

ஆகாயம் என்று பரவசபடாதே ஆகாது என்றும் பரவசபடாதே ஆகும் உன்னால் ஆகும் ஆகாயம் வரை ஆட்டிப் படைக்க.... உலகில் ஒரு ஆம்ஸ்ட்ராங் இல்லை உன்னுள் நீயும் ஒரு ஆம்ஸ்ட்ராங் உத்தமனாய் ஊக்கத்துடன் விரைந்து வா உன்னை வரவேற்க வானம் விரைகிறது உன்னை நீயே சுற்றாதே நண்பா உலகை நீ சுற்றி வா உலகில் நீயும் ஒரு மெஹல்லன் உன்னை போல் ஆயிரம் மெஹல்லனை உருவாக்கு புதுயுக மானிடனாய் எழுந்து வா புழுதியில் புழுவாய் அல்ல புது ஒளி பொழிந்திட வா - உலகை புதுமையுடன் வாழ வை . . . . . என்றும் அன்புடன் . . . . . சங்கீதா with love .... sangeetha

Tamil Poem தமிழ் கவிதை | நானும் ஆகணும் உன்னை போல (naanum aakanum unnai pole)

குக்கூ குக்கூ பாடும் குயிலம்மா தித்தை தித்தை ஆடும் மயிலம்மா என் பாஷை சொல்லவந்த கிளிபெண்னம்மா என் ஆசை அள்ளவந்த சிட்டு கண்ணம்மா கூண்டுக்குள்ளே நீ இருந்து கூவுகின்ற காரணத்தை கூறு எந்தன் குயிலம்மா - நான் உன்னைப் போல பாடணும் . . . . மழையை தானே காட்ட வந்தாய் மயிலே மயிலே ஆடம்மா நடனம் கற்க ஓடி வந்தேன் - நானும் உன்னை போல ஆடணும் . . . . பஞ்சவர்ண பட்டுடுத்த  - என் அஞ்சு வண்ண கிளியே - ஒரு பட்டு நான் பாட அதை கேட்டு நீ பாடு . . . . பூவுக்குள்ளே தேனை அள்ள பூவைதானே தேடிவந்த சிட்டுக்கண்ணம்மா தேனுறிய கற்று கொடு தேனமிர்தம் நானும் தருவேன் என்றும் அன்புடன் . . . . . சங்கீதா with love .... sangeetha

Tamil Poem தமிழ் கவிதை | குமரியிலே (Kumariyile)

 முக்கடலும் சங்கமிக்கும் பழம்பெரும் மென் திருக்குமரியிலே ......................... பச்சை கம்பள புல்வெளி என்ன - பெரும் பாறையில் வீற்ற கோபுரமென்ன - நல் பாதை கட்டிய தர்மவீரன் விவேகானந்தரின் பரவச பாறை என்ன! இந்திய பாதமாம் என் குமரியிலே இந்திய தந்தை மண்டபமென்ன - ஓங்கிய சீர் திருவடியாம் பகவதியம்மன் சீறடி தினமொளிரும் மூக்குத்தி என்ன! இருவரியில் மனித மாண்பை உணர்த்திய திருவள்ளுவர் சீர் ரூபமென்ன? இத்தனைக்கும் ஓங்கிய ஓர் பெருமை இந்திய குமரி பெண் கன்னியாகுமரியை அன்றோ சாரும்? இக்கவிதையை தொகுத்தவர் திருமதி சங்கீதா This Tamil poem has been written by my wife Mrs. Sangeetha about 'Kanyakumari'